திருவண்ணாமலை: ஓதலவாடி ஏரியும், அப்பகுதி செய்யாற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கண்டும் காணாதவாறு அரசு அதிகாரிகள் இருக்கின்றனர் என்று கிராம மக்கள் ேவதனை தெரிவிக்கினறர். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைத் தொடரில் உருவாகி கலசபாக்கம், கரையாம்பாடி, கரைப்பூண்டி, மண்டகொளத்தூர், தச்சூர், என பல்வேறு ஊர்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கும் செய்யாறில் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக போளூர் பகுதியில் வசூர், நல்லாம்பட்டு, சனிக்கவாடி, கரைப்பூண்டி, மண்ட கொளத்தூர், ஒகூர் ஆகிய பகுதியில் நாள்தோறும் இரவு நேரங்களில் மணல் கொள்ளை அரங்கேறிவருகிறது. இதற்காக கூலியாட்களை வைத்து மணலை சலித்து குவியல் குவியலாக குவித்து வைக்கின்றனர்.செய்யாற்றில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த மணல் கொள்ளையால் போளூர் பகுதிமுழுவதும் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.‘இந்நிலையில் மணல் திருட்டு குறித்து புகார் தெரிவித்தாலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.