சென்னை : பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு தடையாணை பெற முடியாத தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகள் அதிமுக ஆட்சியில் ஒவ்வென்றாக பறிபோய் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் பாலாற்றின் குறுக்கே 40 அடி உயரத்துக்கு 22 தடுப்பணைகளை ஆந்திர மாநில அரசு கட்டிவருவதை அதிமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது என்று கூறினார்.