அரியலூர்: செந்துறை அருகே பொன்பரப்பி அரசுப்பள்ளியில் இலவச மடிக்கணினி உள்ள அறைக்கு பெற்றோர் பூட்டு போட்டனர். இந்தாண்டு 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க மடிக்கணினிகள் வந்துள்ள நிலையில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தங்களுக்கு மடிக்கணினி கோரி கடந்த ஆண்டு 12 ம் வகுப்பு பயின்ற மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.