நெல்லை: நெல்லை தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலை விரிவாக்கப்பணி முடிவடைந்தபோதும் சாலையின் நடுவே தடுப்பு அமைக்கப்படாததால் விபத்து அபாயம் நிலவுகிறது. நெல்லை மாநகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சில சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படுகின்றன. இந்த திட்டத்தில் தச்சநல்லூரில் இருந்து தாழையூத்து வரையிலும் பாளை மத்திய சிறையில் இருந்து டக்கரம்மாள்புரம் பாலம் இணையும் இடம் வரையிலும் நான்குவழிச்சாலைகளாக மற்றும் பணி தற்போது மும்முரமாக நடக்கிறது. சாலைகள் விரிவாக்கப் பணிகள் ஓரளவு நிறைவு பெற்றுவிட்டது. இந்த பகுதிகளில் உள்ள சிறிய பாலங்கள், கல்வெட்டு பாலங்கள் அகலப்படுத்தும் பணி தற்போது நடக்கிறது. சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு தார் தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன.