ஹைதரபாத் : ஆந்திர மாநில தலைநகராக அமராவதி நகரை கட்டமைக்க ரூ.2000 கோடி கடன் தர ஒப்பந்தம் செய்து கொண்ட சீனாவைச் சேர்ந்த உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. தெலங்கானா மாநில பிரிவினைக்கு பின்னர் ஆந்திராவிற்கு தலைநகராக அமராவதியை கட்டமைக்க அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக விவசாயிகளிடம் இருந்து 33,000 ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்பட்டது. ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்த பல திட்டங்களை தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ரத்து செய்து வருகிறார்.