கர்நாடக பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ மகேஷ் கட்சியிலிருந்து நீக்கம்: மாயாவதி அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ மகேஷ் கட்சியிலிருந்து நீக்குவதாக மாயாவதி அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவிட்ட நிலையில் எம்.எல்.ஏ மகேஷ் வாக்கெடுப்பில் பங்கேற்காததால் அவரை மாயாவதி கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். கர்நாடகா சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. கொல்லேகல் தொகுதியின் எம்.எல்.ஏ.வான மகேஷ் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் குமாரசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் மாயாவதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மகேஷ் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.இதையடுத்து ட்வீட்டர் பதிவில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ மகேஷ் நீக்கப்படுவதாக மாயாவதி அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கட்சி தலைமை உத்தரவிட்ட நிலையில், எம்.எல்.ஏ மகேஷ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: