மதுரை:
பொதிகை, பாண்டியன், அனந்தபுரி விரைவு ரயில்கள் மதுரையில் இருந்து
புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மதுரையில் அனந்தபுரி விரைவு ரயிலின் அடியில் சிக்கிய பெண் ஒரு மணிநேர
போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.கேரளாவின் கொல்லம் மற்றும்
சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்
இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்ட அனந்தபுரி
விரைவு ரயில் இன்று காலை மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது
பயணிகள் இறங்கியுள்ளனர். ரயிலில் பயணம் செய்த பூர்ணிமா என்ற பெண் ரயில்
பெட்டியில் இருந்து நடைமேடையில் இறங்கியுள்ளார்.
அப்போது அவர் தவறி
விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டார். தகவல் அறிந்த
ரயில்வே போலீசாரும், பொதுமக்களும் அவரை மீட்க முயன்றனர். தொடர்ந்து ஒரு
மணிநேர போராட்டத்திற்கு பின் அந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்.
விபத்தில் சிக்கிய இதில் பூர்ணிமா என்ற பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதன்பின் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து அந்த வழியே செல்ல
வேண்டிய மற்ற ரயில்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டன.
பொதிகை, பாண்டியன், அனந்தபுரி விரைவு ரயில்கள் மதுரையில் இருந்து
புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவு ரயில்கள் 2 மணி நேரமாக
நிற்கின்றனர். ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அந்த ரெயில்களில்
இருந்த பயணிகள் சரியான நேரத்தில் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல்
அவதிப்பட்டனர்.