×

சாக்லெட் கொடுத்து சிறுவனிடம் சில்மிஷம் ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாக்லெட் கொடுத்து சிறுவனிடம் சில்மிஷம் செய்த ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, வியாசர்பாடி, சாமந்தி பிளவர் காலனியை சேர்ந்தவர் சாரங்கபாணி(42). இவர் கடந்த 2017ம் ஆண்டு தனது வீட்டின் அருகே இருந்த 7 வயது சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து அழைத்துள்ளார். பின்னர் அந்த சிறுவனை தனியாக அழைத்து சென்று, ஆசையாக பேசி, தவறாக நடந்தும், சிறுவனையும் தவறாக செய்ய வைத்துள்ளார். மேலும் இது குறித்து வீட்டிலோ, வெளி நபர்களிடமோ கூறினால், உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.ஆனால், இது குறித்து சிறுவனின் வீட்டில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் சென்னை, எம்.கே.பி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலீசார், சாரங்கபாணியை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் தவறு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு சென்னை மகளீர் நீதிமன்றத்தில், நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார். பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் சாட்சியங்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட சாரங்கபாணி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.



Tags : A 10-year,jail term, child-like, child
× RELATED பெண் வாங்கிய விவசாய கடனை சொந்த...