சொல்லிட்டாங்க...

தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் ஆர்டிஐ சட்ட மசோதாவை மத்தியஅரசு அடியோடு அழிக்க முயற்சிப்பது மிகுந்த கவலையளிக்கிறது. - ஐமுகூ தலைவர் சோனியா காந்தி

ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பது உச்ச நீதிமன்ற அவமதிப்பதாகும். இந்த அத்துமீறலை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்

வேலூர் மக்களவை தொகுதியில் 30 அமைச்சர்கள் மையம் கொண்டிருப்பது அவர்களின் பலவீனத்தையும், நாங்கள் எவ்வளவு பலத்தோடு இருக்கிறோம் என்பதையும் காட்டுகிறது.  - திமுக பொருளாளர் துரைமுருகன்.

மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக்கொள்கை அரசு பள்ளிகளை மூடும் வகையில் அமைந்திருக்கிறது. புதிய கல்வி கொள்கை அறிமுகமானால் 100 சதவீதம் தனியார் வசம் சென்றுவிடும். - மார்க்சிஸ்ட் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.

Related Stories: