×

நக்சல் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்:  சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்திற்கு உட்பட்ட பிராபட்டி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில்  நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. மாவட்ட ரிசர்வ் போலீசார்  காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது  நக்சல்களுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் தப்பி ஓடினர். கொல்லப்பட்ட நக்சலின் பெயர், மத்காம் ஹித்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவனது தலைக்கு போலீசார் 1 லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Tags : Naxal, killed
× RELATED ஆம்பூர் அருகே பரிதாபம்: குளத்தில்...