நேபாளத்தில் நிலச்சரிவு 6 பேர் பலி

காத்மண்ட்:  நேபாளத்தில் கனமழை காரணமாக குல்மி மாவட்டத்திற்கு உட்பட்ட லிம்பா மற்றும் துலோ லும்பெக் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த பகுதியில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினார்கள். தகவலறிந்து விரைந்த மீட்பு குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். துலோ லும்பெக் கிராமத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். லிம்கா கிராமத்தில் இறந்த நிலையில் 4 பேரது சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவங்களில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories: