ஆந்திர புதிய கவர்னர் இன்று பதவியேற்பு

திருமலை: ஆந்திராவின் 23வது கவர்னராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஸ்வபூஷண் ஹரிச்சந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அவர் இன்று விஜயவாடாவில் நடக்கும் விழாவில் கவர்னராக பொறுப்பேற்கிறார். இதற்காக ஒடிசாவில்  இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று ரேணிகுண்டா   வந்தார். பின்னர், கார் மூலம் ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுஅவர் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை 11.30 மணியளவில் விஜயவாடாவில் உள்ள ராஜ்பவனில் நடக்கும் விழாவில் அவர் கவர்னராக பதவியேற்கிறார்.

Related Stories: