கும்பகோணம்: ராஜராஜ சோழன் பற்றி கருத்து தெரிவித்த வழக்கில் இயக்குனர் ரஞ்சித்துக்கு கும்பகோணம் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் கடைத்தெருவில் கடந்த ஜூன் 5ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜசோழனை பற்றி அவதூறாக பேசினார்.இதையடுத்து ஜூன் 10ம் தேதி திருபனந்தாள் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கவிதா, பா. ரஞ்சித் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். இதனையடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கும்பகோணம் நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் இருநபர் ஜாமீன் கொடுத்து , 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கினார்.