×

வண்டலூரில் சுங்கச்சாவடி பணிக்காக கொட்டப்பட்டிருந்த மணலில் சறுக்கி இளைஞர் உயிரிழப்பு

சென்னை: சென்னை வண்டலூர் புறவட்ட சாலையில், சுங்கச்சாவடி பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண்ணில் இருசக்கர வாகனத்துடன் சறுக்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார். தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் வளையாபதி தெருவை சேர்ந்த கிங்ஸ்லி மன்றோ என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

நேற்றிரவு பணிமுடிந்து அவர் வண்டலூர்- மீஞ்சூர் புறவட்ட சாலை வழியாக வீட்டுக்கு சென்றபோது, கிஷ்கிந்தா அருகே சுங்கச்சாவடி அமைக்க சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மணல் சறுக்கி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சோமங்கலம் போலீசார் சடலத்தை கைபற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

முன்னதாக விபத்து அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள்  முறையான பாதுகாப்பின்றி சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடப்பதாக கூறி, சடலத்தை எடுக்கவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களின்  கோரிக்கையை ஏற்று அங்கிருந்து மணல் அகற்றப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : Vandalur, Customs Service, Dumped Sand, Slide, Youth, Death
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...