மயிலாடுதுறை: மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கை ஆகும். இதனை வலியுறுத்தி 5 நாட்களாக தொடர்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் படி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.