மதுரை : தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்கான உதவித்தொகையை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பழனிவேல் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு 20-ம் தேதி ஒத்திவைத்தது.