திருநெல்வேலி: மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டதன் 20-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கட்சியினர் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மலர் வலையத்துடன் பேரணியாக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தாமிரபரணி ஆற்றில் இறங்கி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போலீஸ் அடக்குமுறையால் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களை பாதுக்காக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை ஆகும். அதே நேரம் தொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.