×

கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!

சென்னை: கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போராட்டத்தின் போது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகை திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நாசமாயின.  இந்த பேரழிவுக்கு அரசுத் தரப்பில் உரிய நிவாரணம் தரப்படவில்லை.

இதையடுத்து, தங்களது வீடுகள், நிலங்கள் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி நாகை மாவட்டம் வேதாரண்யம்  தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த இனியவன் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டவர்கள்,   நிவாரணம் கேட்டு போராடினர்.  அப்போது, போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பின்னர் போராட்டம் நடத்திய 140க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.  இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை ராஜேந்திரன், ரங்கசாமி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல் விஜயேந்திரன் ஆஜராகி, நியாயமான முறையில் நிவாரணம் கேட்டதற்காக மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் இருந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

அரசு நிவாரணம் வழங்காததை கண்டித்துதான் போராட்டம் நடத்தியதாக முன்வைத்த பொதுமக்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்றது. அதேபோல போராட்டத்தின் போது காவல்துறை வாகனங்களை தாக்கியதாக 60 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


Tags : Gaza Storm, Relief, Pickup, Case Cancellation, Madras High Court
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...