திருமலை: ஆந்திர மாநில கவர்னராக நாளை பதவியேற்கவுள்ள விஷ்வ பூஷன் ஹரிச்சந்திரா ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். அவரை சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா டி.ஐ.ஜி.கிராந்தி ராணா டாடா, திருப்பதி எஸ்.பி. அன்புராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.