நாகர்கோவில்: கடைகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.