நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில், மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மாவட்ட எஸ்பி அருளரசு முன்னிலையில் இன்று பொது ஏலம் விடப்பட்டது. அப்போது வாகன ஏலம் கேட்பவர்கள் முன் வைப்பு கட்டண தொகையை செலுத்தி, ஏலம் எடுத்த பின், குறிப்பிட்ட தொகையை செலுத்தி ஏலம் எடுத்துக்கொண்டனர்.