வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து 4வது நாளாக பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. வனத்துறையில் தற்காலிக பணியாளா–்களாக உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் இதர பணியாளர்களை பணி மூப்பு அடிப்படையில் வனத்துறை பணிகளில் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப் உள்ளிட்ட வனச்சரத்தில் பணியாற்றும் சுமார் 250 ஊழியர்கள் களப்பணிக்கு செல்லாமல் தொடர்ந்து 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.