காடையாம்பட்டி: சேலம் காடையாம்பட்டியில் 10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். இவர், 4வது முறையாக சிக்கியுள்ளார். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் முருகேசன்(51) என்பவர், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு தன்னை டாக்டர் என கூறிக்கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். மேலும், சந்தைப்பேட்டை பகுதியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து கிளினிக் நடத்தி வந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஏற்கனவே 3 முறை கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். இதையடுத்து, நீண்ட நாள் ஜாமீனில் வெளி வந்த அவர் மீண்டும் மருந்து- மாத்திரை கொடுத்தும், ஊசி போட்டும் சிகிச்சையளித்து வருவதாக புகார் எழுந்தது.