கும்பகோணம்: ராஜராஜ சோழன் பற்றி கருத்து தெரிவித்த வழக்கில் இயக்குனர் ரஞ்சித்துக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சை கருத்துக்கள் கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் கும்பகோணம் நீதிமன்றத்தில் இயக்குனர் ரஞ்சித் ஆஜரானார். காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று கூறி ரஞ்சித்துக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.