தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம்

டெல்லி : தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது; லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நியாயமில்லை என  தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் நடத்தினர். மேலும் லோக் ஆயுக்தா போன்ற அரசு அமைப்புகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் பணி அரசு பணி என கருத முடியாது என தமிழக அரசு வாதம் நடத்தியது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: