திருச்சுழி அருகே குழந்தை இறந்துவிட்டதாக கூறி, சட்டவிரோதமாக தத்துக் கொடுத்த டாக்டர் தம்பதி கைது: போலீசார் விசாரணை

விருதுநகர்: கல்லுமடத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் சக்திமுருகன் என்பவரை காதலித்துள்ளார். திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ராஜலட்சுமிக்கு 2016ம் ஆண்டு, கல்லூரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்துக்கு முன்பே பிறந்ததால், இந்த குழந்தை வேண்டாம் என மருத்துவர்களிடம் ராஜலட்சுமியின் தாய் முத்துலட்சுமி கூறியுள்ளார்.

குழந்தை இறந்துவிட்டதாக ராஜலட்சுமியிடம் தெரிவித்த மருத்துவர்கள், அருப்புக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ், சண்முகப்பிரியா தம்பதியிடம் குழந்தையை தத்து கொடுத்தனர். ராஜலட்சுமியை காதலன் சக்திமுருகன் முறையாக திருமணம் செய்துள்ள நிலையில் திருமணத்துக்கு முன் பிறந்த ஆண் குழந்தை தத்து கொடுக்கப்பட்டது தனது தாய் மூலம், ராஜலட்சுமிக்கு தெரியவந்தது.

இதுகுறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், குழந்தையை மீட்ட போலீசார், தத்தெடுத்த ஜெயராஜ், சண்முகப்பிரியா, இதற்கு உடந்தையாக இருந்த மருத்துவர் தம்பதி வினோதமயந்தி, வடிவேல் முருகன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ராஜலட்சுமியின் தாய் முத்துலட்சுமி மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: