ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள அத்தாணி அருகே ஓடை மேடு பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவரது மகன் வல்லரசு என்ற பிரகாஷ் (35).பைக் மெக்கானிக். இவர், கடந்த 20 ஆண்டாக அத்தாணி பேரூராட்சிக்கு சொந்தமான கடையில் மெக்கானிக் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். கடந்த 3 மாதத்துக்கு முன்பு இக்கடையை பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விட்டது. ஏலத்தில், பெருமாபாளையத்தை சேர்ந்த சேகர் என்பவர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தார். அவர், உடனடியாக கடையை காலி செய்யும்படி பிரகாஷிடம் கூறி உள்ளார். ஆனால், பிரகாஷ் கடையை காலி செய்யாமல் இருந்ததால் கடந்த 12ம் தேதி சேகர் கடையில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டார். இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.