மதுரை : மதுரை அருகே பனையூர் கிராமத்தில் கண்மாய் காணவில்லை என கூறி கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். நீர் நிலைகள் மீதான இந்த அலட்சியமான போக்கு தொடர்ந்தால், வருங்காலத்தில் மொத்த தமிழகமும் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர்.