டெல்லி : அண்மையில் நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 51 வாக்குகள் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் வித்தியாசப்பட்டு இருந்ததாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் என்ற ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாகும். ஆனால் நாடு முழுவதும் வெறும் 8 இயந்திரங்களில் மட்டுமே கோளாறு இருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.