இரட்டை கொலையில் மேலும் 3 பேர் கைது

தாம்பரம்: தாம்பரத்தில் நடந்த இரட்டை கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.  

மேற்கு தாம்பரம், கடப்பேரி, அற்புதம் நகர், கலங்கள் தெருவில் கடந்த 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் (எ) சின்ன அப்புனு (30), கிழக்கு தாம்பரம், ஆதிநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (எ) புட்டி சுரேஷ் (29) ஆகிய இரண்டு ரவுடிகளும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவர்களை வழிமறித்து ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பியது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாம்பரம் காவல் நிலைய போலீசார், 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேற்கு தாம்பரம், அற்புதம் நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் (42), சிட்டிபாபு (36) மற்றும் மேற்கு தாம்பரம், கடப்பேரி, பஜனை கோயில் தெருவை சேர்ந்த அப்பு (36) ஆகியோர் தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர்களை போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: