தாம்பரம்: தாம்பரத்தில் நடந்த இரட்டை கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மேற்கு தாம்பரம், கடப்பேரி, அற்புதம் நகர், கலங்கள் தெருவில் கடந்த 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் (எ) சின்ன அப்புனு (30), கிழக்கு தாம்பரம், ஆதிநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (எ) புட்டி சுரேஷ் (29) ஆகிய இரண்டு ரவுடிகளும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவர்களை வழிமறித்து ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பியது.