ஆலந்தூர்: கிண்டி ஈக்காட்டுதாங்கல் காவேரி தெருவில் வசிப்பவர் சாந்தி (25) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர், அங்குள்ள ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிங்கப்பூரில் கார் ஓட்டுனராக வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டம் சவரபேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், பேஸ்புக் மூலம் சாந்திக்கு அறிமுகமானார். கடந்த 4 மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாகவும், கடந்த 3 மாதத்திற்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்த ராதாகிருஷ்ணன் (32), அடிக்கடி சென்னை வந்து சாந்தியை அழைத்துக் கொண்டு பல இடங்களுக்கு ஜாலியாக சுற்றியுள்ளார்.