திருமலை: ஆந்திர மாநிலத்தில் எஸ்ஐ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார். இதில் தேர்வு எழுதிய 15,775 பெண்களில் 61 பேர் மட்டும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், வெலகம்புடி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கான தேர்வு முடிவுகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று வெளியிட்டார். இதில் உள்துறை அமைச்சர் சுச்சரித்தா, டிஜிபி கவுதம் சவாங், புலனாய்வு துறை முதன்மை அதிகாரி குமார் விஸ்வஜித் கலந்துகொண்டனர். அப்போது உள்துறை அமைச்சர் சுச்சரித்தா நிருபர்களிடம் கூறியதாவது: 333 உதவி ஆய்வாளர், சிவில், ரிசர்வ், ஏஆர், ஏபிஎஸ்பி, துணை ஜெயிலர்கள், நிலைய தீயணைப்பு அதிகாரி பதவிக்கான தேர்வு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 414 பேர் பங்கேற்றனர். உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வுக்கு பிறகு 32 ஆயிரத்து 745 பேர் தேர்வு எழுதினர். இதில் 149 சப்-இன்ஸ்பெக்டர், 75 ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர், 75 சிறப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 துணைச் ஜெயிலர்கள், 20 நிலைய தீயணைப்பு அதிகாரிகளுக்கான பதவிக்கு தேர்வு எழுதினர்.