ஆண்டிபட்டியில் அதிமுக நிர்வாகி எரித்துக்கொலை

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி குமாரபுரத்தை சேர்ந்தவர் பாண்டிதுரை மகன் சதீஷ் (24). ஆண்டிபட்டி ஒன்றிய அதிமுக மாணவரணி துணை அமைப்பாளர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை டி.வி.ரெங்கநாதபுரத்தில் உள்ள அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சதீஷின் உடல் கிடந்தது. இதுகுறித்து சதீஷின் தாய் பேச்சியம்மாள் கொடுத்த புகாரின்பேரில், ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து, தொழில் போட்டியால் சதீஷ் கொலையானாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிபட்டியில் அதிமுக நிர்வாகி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: