ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை மருந்து வணிகர்கள் சங்கம் வலியுறுத்தல்

கோவில்பட்டி: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என கோவில்பட்டியில் நடந்த தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்தது. மாநில தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். சங்க பொதுச் செயலாளரும், அகில இந்திய மருந்து வணிகர் சங்க பொருளாளருமான செல்வன், பொருளாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு மத்திய அரசு உடனடியாக தடைவிதிக்க வேண்டும். மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்திற்கு திருச்சியில் சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோரிக்கைகள் தொடர்பாக எம்பிக்களை நேரில் சந்தித்து மனு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: