முத்துப்பேட்டை: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் சென்றாண்டு பாஜக பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தில் சிலர் அரிவாளால் வெட்டினர். இச்சம்பவத்தில் குற்றவாளியாக கீழக்கரை, தேவிப்பட்டினம், பரங்கிப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ பிரிவு) விசாரணைக்கு மாற்றப்பட்டது. தேவிபட்டிணம் ஷேக்தாவூது என்பவர் கொடுத்த தகவலின் பேரில் முத்துப்பேட்டையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக 2 முறை முத்துப்பேட்டையில் உள்ள 3 வாலிபர்களின் வீடுகளில் என்ஐஏ பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் சமீபத்தில் அன்சருல்லா இயக்கத்தில் தொடர்புடையவர்கள் என ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த 14 பேர் அந்த நாடுகள் மூலம் வெளியேற்றப்பட்டு இந்திய தூதரகம் வாயிலாக புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.