புதுடெல்லி: சோன்பத்ரா வன்முறை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் நிலத்தகராறில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் சட்டவிரோதமாக கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் சோன்பத்ரா வன்முறை சம்பவம் மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.