கொடைக்கானல்: வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில், வார விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, மோயர் பாயிண்ட், பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.
நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ததுடன், பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ள மலர்களை கண்டு ரசித்தனர். நேற்று காலையில் இருந்தே மிதமான வெப்ப நிலை இருந்தது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இந்த சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்து ரசித்தனர்.