செம்பட்டி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள அண்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பூங்காக்கள், சாலையோரம் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் மரக்கன்றுகளை நட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயசந்திரிகா முகமது மாலிக் ஆகியோர் தலைமையில் பூங்காக்கள், குளக்கரைகள் மற்றும் சாலையோரம் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.