மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் நிலவிவந்த கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு, தற்போது போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இரும்பு கொக்கிகள் பக்கச்சுவர்களில் பொருத்தப்பட்டுள்ளன.இந்த கொக்கிகளின் ஒருபகுதி ஆபத்தான நிலையில் சாலையில் நீண்டு நிற்கின்றன. மேம்பாலத்தின் குறுகிய பகுதிகளிலும் இதுபோன்று இரும்பு கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஓரமாக ஒதுக்கும்போது இந்த கம்பிகளில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் கவனக்குறைவாக வரும் வாகனங்கள் நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளில் சிக்கும் நிலை உள்ளது.