மார்த்தாண்டம்: படந்தாலுமூடு பணிமனையில் உள்ள அரசு பஸ் இன்று காலை களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. சிஎஸ்ஐ மருத்துவமனையை தாண்டி பஸ் வந்தபோது திடீரென முன்பக்க டயர்களில் ஒன்று நடுரோட்டில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்திவிட்டார். பின்னர் பயணிகள் இறங்கி நடந்து சென்றனர். மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலைகள் மிகவும் அகலம் குறைவாக உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன.