சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான் மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் தாம் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் சயான் வழக்கு தொடர்ந்து இருந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.