நிலவின் தென்துருவத்தை ஆராயும் சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆராயும் சந்திராயன்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 15ம் தேதி ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததை அடுத்து ஏவுவதற்கான கவுன்டவுன் திடீரென நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது தொழில்நுட்ப கோளாறு அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திராயன்-2 விண்கலம்  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் பயணத்திற்கு பிறகு செப்டம்பர் 7-ம் தேதி சந்திராயன்-2 நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும்.

Related Stories: