டெல்லி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழை அடுத்த இரண்டு நாட்கள் தொடரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.