திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் வசூலித்த அபராத தொகையுடன் மாயமான சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை கோட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் நயீம்(52). இவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மே மாதம் வழக்கம்போல வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்தார். இதில் ₹7,000க்கு மேல் வசூலாகி உள்ளது.ஆனால், பணத்தை ஸ்டேஷனில் ஒப்படைக் காததுடன் பணிக்கும் வரவில்லை. இதற்கிடையே நயீமின் மனைவி டிஜிபியிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது கணவரை போலீசார் வீட்டுக்கு வந்து மிரட்டினர் என தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க டிஜிபி லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார். விசாரணையில் அது பொய்யான புகார் என ெதரியவந்தது.