சென்னை: சென்னை ராயபுரம் பகுதி ஏ.ஜெ. காலனியில் புதிதாக அமைக்கப்பட்ட சேனியம்மன் மீனவர் கூட்டுறவு சங்கத்தை மின்வள துறை அமைச்சர் ஜெயகுமார் நேற்று திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வேலூர் தொகுதி தேர்தலில் பாஜவுடன் கூட்டணி தொடரும். எட்டு வழி சாலை குறித்து முதல்வர் தெளிவாகவே பதில் அளித்துள்ளார். அது மக்களை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும். காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.