வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே’ என்ற ெகாள்கையில் விடாப்பிடியாக இருக்கும் டிரம்ப், பிற நாடுகளில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மீது எதிர்மறையான கருத்துக்களை கொண்டுள்ளார். இதன் காரணமாக அவ்வப்போது இனரீதியிலான கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார்.
‘ஜனநாயக கட்சியை (எதிர்க்கட்சி) சேர்ந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பி செல்ல வேண்டும்,’ என டிரம்ப் சமீபத்தில் டிவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். இது விமர்சனத்துக்கு உள்ளானது. இதை கண்டித்து நாடாளுமன்றத்தில் அவர் மீது கொண்டு வரப்பட்ட தீர்மானமும் வெற்றி பெற்றது.