துபாய்: இந்தியாவைச் சேர்ந்த நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் நாயுடு, துபாயில் நடந்த நிகழ்ச்சியில் சுருண்டு விழுந்து பலியானார்.இந்தியாவைச் சேர்ந்த நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் நாயுடு (36). மேடைகளில் ‘ஸ்டேண்ட் அப் காமெடி’ எனப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் பெற்றவர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அபுதாபி நகரில் பிறந்த இவர், பின்பு துபாயில் குடியேறினார். துபாயில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இவர் பேசிக் கொண்டிருந்தார். தனது குடும்பத்தை பற்றி கூறிக் கொண்டிருந்த இவர், மன அழுத்தம் காரணமாகதான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் என்பதை நகைச்சுவையாக கூறி ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.