புதுடெல்லி: மாசடைந்த 34 ஆறுகளை தூய்மைப்படுத்த 5,870.55 ேகாடியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. நாடு முழுவதும் 16 மாநிலங்களில் 77 நகரங்கள் வழியாக செல்லும் 34 ஆறுகள் சூற்றுச்சூழல்களால் மாசடைந்து காணப்படுகின்றன. மிக மோசமாக காணப்படும் இந்த ஆறுகளை தூய்மைப்படுத்த 5,870.55 கோடி ஒதுக்கீடு செய்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த தொகையில் ₹,5 கோடியை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு முதல் தவணையாக சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்துள்ளது. தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இந்த தொகையை மாநிலங்கள் இந்த ஆண்டு பெற்றுள்ளன.