கொடைக்கானல்: அரசு சாலைகளை தனியார் பராமரிக்க அனுமதித்தால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாைல பணியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் பயிற்சி முகாம் கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த பயிற்சியில் மாநிலம் முழுவதும் இருந்து 10 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் பேசுகையில், ‘‘தமிழக அரசின் மாநில, மாவட்ட சாலைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர்.