புதுடெல்லி: உணவுக்காக வளர்க்கப்படும் உயிரினங்களுக்காக ‘கொலிஸ்டின்’ நோய் தடுப்பு மருந்து விற்பனை, உற்பத்திக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.உணவுக்காக வளர்க்கப்படும் கால்நடைகள், பறவைகள் போன்றவற்றுக்கு நோய் தாக்குதலை தடுக்க, நோய் தடுப்பு மருந்துகளும், எதிர்ப்பு சக்தி மருந்துகளும் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, கறிக் கோழிகளுக்கு ‘கொலிஸ்டின்’ போன்ற நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், உணவுக்காக வளர்க்கப்படும் கோழிகள், மீன்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எதிர்ப்பு சக்தி மருந்துகள், கொலிஸ்டின் மற்றும் இவை கலந்த மருந்துகளை விற்பனை செய்வதற்கும், உற்பத்தி மற்றும் விநியோகம் செய்வதற்கும் மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.